/உள்ளூர் செய்திகள்/தேனி/சொட்டுநீர் பாசன மானியம் தோட்டக்கலைத்துறை குழப்பம்சொட்டுநீர் பாசன மானியம் தோட்டக்கலைத்துறை குழப்பம்
சொட்டுநீர் பாசன மானியம் தோட்டக்கலைத்துறை குழப்பம்
சொட்டுநீர் பாசன மானியம் தோட்டக்கலைத்துறை குழப்பம்
சொட்டுநீர் பாசன மானியம் தோட்டக்கலைத்துறை குழப்பம்
ADDED : செப் 24, 2011 10:06 PM
தேனி : சொட்டுநீர் பாசன கருவிகளுக்கு மானியம் எவ்வளவு என்பது தெளிவாக தெரியாததால், தோட்டக்கலைத்துறை குழப்பத்தில் உள்ளது.
தென்னை, மா, நெல்லி, வாழை உட்பட பல்வேறு பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 முதல் 75 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொட்டுநீர் பாசன மானியம் நூறு சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சட்டசபையிலும் இது தொடர்பான அறிவிப்பு வெளியானது. ஆனால், முறையான அரசு உத்தரவு இன்னும் வெளியாகாததால், எத்தனை சதவீத மானிய அடிப்படையில் விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறுவது என்பதில் தோட்டக்கலைத்துறை குழப்பத்தில் உள்ளது.


