ADDED : செப் 06, 2011 11:53 PM
மதுரை: மதுரையில் தென்மாவட்ட போலீஸ் பட்ஜெட் குறித்து, தலைமையிடத்து ஏ.டி.ஜி.பி., சஞ்சீவ் குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாஸ், கமிஷனர் கண்ணப்பன், நெல்லை கமிஷனர் வரதராஜூலு, டி.ஐ.ஜி.,க்கள் சஞ்சய் மாத்தூர், சந்தீப்மிட்டல் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர். வாடகை கட்டடங்களில் செயல்படும் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சொந்த கட்டடம் கட்டுவது உட்பட வளர்ச்சி பணிகளுக்கு எவ்வளது நிதி தேவை; போலீசாருக்கு தரவேண்டிய நிலுவைத்தொகை குறித்து விவாதிக்கப்பட்டது.