/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/விதிமுறை மீறி வாகனம் ஓட்டியதாக 303 பேர் மீது வழக்குவிதிமுறை மீறி வாகனம் ஓட்டியதாக 303 பேர் மீது வழக்கு
விதிமுறை மீறி வாகனம் ஓட்டியதாக 303 பேர் மீது வழக்கு
விதிமுறை மீறி வாகனம் ஓட்டியதாக 303 பேர் மீது வழக்கு
விதிமுறை மீறி வாகனம் ஓட்டியதாக 303 பேர் மீது வழக்கு
ADDED : செப் 01, 2011 02:03 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்திய வாகன சோதனையில் ஒரே நாளில் 303 பேர் மீது போக்குவரத்து விதியை மீறி வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 303 பேர் மீது போலீசார் போக்குவரத்து விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதன்படி டூவீலரில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 33 பேர் மீதும், 3 பேருக்கு மேல் வாகனம் ஓட்டியதாக 21 பேர் மீதும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 96 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தூத்துக்குடி டவுனில் பலரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டி வருகின்றனர். எனவே மாவட்ட எஸ்.பி., தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.