/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சி புறவழிச்சாலைக்குநிலம் அளக்க கடும் எதிர்ப்புசெஞ்சி புறவழிச்சாலைக்குநிலம் அளக்க கடும் எதிர்ப்பு
செஞ்சி புறவழிச்சாலைக்குநிலம் அளக்க கடும் எதிர்ப்பு
செஞ்சி புறவழிச்சாலைக்குநிலம் அளக்க கடும் எதிர்ப்பு
செஞ்சி புறவழிச்சாலைக்குநிலம் அளக்க கடும் எதிர்ப்பு
ADDED : ஆக 20, 2011 02:36 AM
செஞ்சி:செஞ்சி புறவழிச்சாலைக்கான நிலங்களை அளந்த அதிகாரிகளுடன் நில
உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில்
புறவழிச்சாலை அமைக்க சங்கராபரணி ஆற்றை அடுத்த புதிய வீட்டுமனை பகுதியில்
நகாய் அதிகாரிகள் இடம் தேர்வு செய்துள்ளனர். இந்த இடங்களை அளந்து
குறியிடும் பணியில் நேற்று நில எடுப்பு பிரிவு சார் ஆய்வாளர்கள் மற்றும்
சேலம் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.இப்பகுதியில் வீடு கட்டி
உள்ளவர்களும், வீட்டு மனை உள்ளவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐகோர்ட்டில் தடை இருப்பதால் அளக்கும் பணியை நிறுத்துமாறு அதிகாரிகளுடன்
வாக்குவாதம் செய்தனர்.இவர்களிடம் பேசிய அதிகாரிகள், ஐகோர்ட்டில் மூன்று
சர்வே எண்களுக்கு மட்டுமே தடை விதித்துள்ளனர். மற்ற சர்வே எண்களில் உள்ள
நிலங்களை அளக்க தடை இருந்தால் கோர்ட் உத்தரவை கொடுங்கள் என கேட்டனர்.
உத்தரவு நகல் சென்னையில் இருப்பதால், அதை கொண்டு வர அவகாசம் வேண்டும் என
நில உரிமையாளர்கள் கேட்டனர்.
இப்பணியை உயர் அதிகாரிகள் நிறுத்த சொன்னால் மட்டுமே நிறுத்த முடியும்
எனக்கூறி அதிகாரிகள் தொடர்ந்து நிலங்களை அளக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


