/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு மருத்துவமனையில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள்அரசு மருத்துவமனையில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள்
அரசு மருத்துவமனையில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள்
அரசு மருத்துவமனையில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள்
அரசு மருத்துவமனையில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள்
ADDED : செப் 25, 2011 10:08 PM
பொள்ளாச்சி : தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்டம் சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மூன்று மாதங்களுக்கு முன் விஷ அறுவை சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது. இந்த பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.டாக்டர்கள் கூறியதாவது:மருத்துவமனையில் உள்ள விஷ சிகிச்சை பிரிவுக்கு மூன்று லட்சம் ரூபாயில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இ.சி.ஜி., கருவி, 'கார்டியாக் மானிட்டர்' இரண்டு, 'டீபிரிப்லேட்டர்' ஒன்று கொடுக்கப்பட்டுள்ளன. இதய துடிப்பு திடீரென நின்றுவிட்டால், இதயத்திற்கு மின் அழுத்தம் கொடுக்கப்பட்டு மீண்டும் கருவியில் மூலம் இதய துடிப்பை இயக்க செய்யும் கருவியான 'டீபிரிப்லேட்டர்' பயனுள்ளதாக உள் ளது. சிகிச்சை பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பிறகு இதய துடிப்பு மற்றும் இதயம் குறித்த கோளாறுகள் இருந்தால் அதனை கண்டறிய 'கார்டியாக் மானிட்டர்' உதவும். இது போன்ற உபகரணங்கள் வழங்கப்படுவதன் மூலம் இம்மருத்துவமனை தரம் உயர்கிறது. இதனால், இங்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும் என்றனர்.