மொராக்கோவில் விமான விபத்து: 78 பேர் பலி
மொராக்கோவில் விமான விபத்து: 78 பேர் பலி
மொராக்கோவில் விமான விபத்து: 78 பேர் பலி
ADDED : ஜூலை 26, 2011 07:32 PM
ராபட்: மொராக்கோவில் ராணுவ விமானம் மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதிகளுக்கு இடையே விபத்துக்குளாளானது.
இந்த விபத்தில் 78 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விமானம் அகாடிரிலிருந்து லயாயூன் என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 6 விமான ஊழியர்கள், 60 ராணுவ வீரர்கள், 12 பொது மக்கள் இருந்தனர். ராணுவ விமானத்தில் வீரர்களையும்,அவர்களது குடும்பத்தினரையும் அழைத்து செல்லப்படுவர். மோசமான வானிலை காரணமாகவே விபத்து நடந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.