Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது

விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது

விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது

விவசாயியை தாக்கிய மூன்று பேர் கைது

ADDED : ஆக 17, 2011 02:56 AM


Google News
ப.வேலூர்: ப.வேலூர் அருகே, விவசாயியை தாக்கிய மூவரை, போலீஸார் கைது செய்தனர்.

ப.வேலூர் அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தவமணி (50). அவருக்கும், பக்கத்து வீட்டுக்காரான ஆறுமுகம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஆறுமுகம், அவரது மருமகன்கள் சதீஸ்குமார் (29), லோகநாதன் (26) ஆகியோர் சேர்ந்து தவமணியை தாக்கியுள்ளார். அதில், படுகாயமடைந்த தவமணி ப.வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ப.வேலூர் போலீஸார், ஆறுமுகம், அவரது மருமகன்கள் சதீஸ்குமார், லோகநாதன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us