ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் மாணவர் பிரிவு துவக்கம்
ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் மாணவர் பிரிவு துவக்கம்
ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் மாணவர் பிரிவு துவக்கம்
ADDED : ஜூலை 29, 2011 10:30 AM
சென்னை: ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில், ' எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங் ' துறையில் ( ஈ.ஐ.ஈ ) மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டது.
' இண்டர் நேஷனல் சொசைட்டி ஆப் அசோஷியேஷன் ' சார்பில், ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில், ஈ.ஐ.ஈ., மாணவர் அமைப்பு துவங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அப்துல் கனி தலைமை தாங்கினார்.'சொயின்ட்' நிறுவன, 'டெக்னோநிப்' பிரிவு பொது மேலாளர் சாய் ரமேஷ் தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, ஈ.ஐ.ஈ., துறைத் தலைவர் புவேனேஸ்வரி வரவேற்றுப் பேசினார். மாணவர் பிரிவின் சார்பில், 2011-12 ம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. ஈ.ஐ.ஈ., மாணவர் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயராகவன், கல்லூரி துணை முதல்வர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி மாணவர்கள் செய்திருந்தனர்.


