Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஜாதி, வருமானச் சான்றுகள் பள்ளியில் வழங்க ஆணை

ஜாதி, வருமானச் சான்றுகள் பள்ளியில் வழங்க ஆணை

ஜாதி, வருமானச் சான்றுகள் பள்ளியில் வழங்க ஆணை

ஜாதி, வருமானச் சான்றுகள் பள்ளியில் வழங்க ஆணை

ADDED : ஆக 17, 2011 02:50 AM


Google News
ஈரோடு: எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஜாதி, இருப்பிடம், வருமானச்சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கலெக்டர் காமராஜ் அறிக்கை:

மாணவ, மாணவியர், செப்டம்பர் 30ம் தேதிக்குள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், விண்ணப்பம் வழங்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களை, ஆதாரங்களுடன் பள்ளி தலைமை ஆசிரியர், அக்டோபர் 15க்குள் உரிய தாசில்தாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். உரிய விசாரணைக்குப்பின், தகுதியானவர்களுக்கு சான்றிதழை டிசம்பர் 31க்குள் தாசில்தார்கள், பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இச்சான்றிதழ்களை ஜனவரி மாதத்துக்குள், மாணவ, மாணவியருக்கு வழங்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி, சுயநிதி பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளிகள், அப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படிப்பவர்களில் இதுவரை இச்சான்றுகள் பெறாதவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்களை வழங்க வேண்டும். ஜாதி, இருப்பிடம், வருமான சான்று பெற தேவையான ஆவண நகல்களை, மாணவர்களிடம் விடுதல் இன்றி பெற்று வழங்க வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும் விடுதல் இன்றி சான்றிதழ் பெற, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி மெட்ரிக் ஆய்வாளர், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தாசில்தார்கள் மற்றும் சார் அலுவலர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, இப்பணியில் மாவட்டம் 100 சதவீதம் முதன்மையாக, சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us