Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பஸ் விபத்து: ஒருவர் சாவு

பஸ் விபத்து: ஒருவர் சாவு

பஸ் விபத்து: ஒருவர் சாவு

பஸ் விபத்து: ஒருவர் சாவு

ADDED : ஜூலை 17, 2011 01:39 AM


Google News

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே திருமண கோஷ்டி சென்ற பஸ் விபத்தில் சிக்கியதில், ஒருவர் இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் நாகலிங்கத்திற்கும், 28, கும்பகோணம் ஆறுமுகம் மகள் தேவி, 25க்கும் ஆதனூரில் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்து மணமக்கள் மற்றும் உறவினர்கள் தனி பஸ்சில் கும்பகோணம் சென்று கொண்டிருந்தனர்.

கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் அருகே சென்றபோது புளியமரத்தில் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த சின்னபொன்னு, 50, பக்கிரிசாமி, 54 உட்பட 24 பேர் படுகாயமடைந்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லும் வழியில் பக்கிரிசாமி இறந்தார்.இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us