கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் உண்ணாவிரதம்
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் உண்ணாவிரதம்
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் உண்ணாவிரதம்
ADDED : செப் 11, 2011 11:38 PM
திருநெல்வேலி: கூடங்குளம் அணுஉலைகளில் மின்உற்பத்தியை நிறுத்தக்கோரி இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரதத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த சில மாதங்களில், மின்உற்பத்தி துவங்க உள்ளது. ஜப்பானில் பிகுஷிமா அணுஉலையில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பால் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டது. கூடங்குளத்திலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என கோரி பொதுமக்கள் நேற்று, கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தரையில், அணுஉலைக்கு எதிரான அமைப்புகள், மீனவர் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். லூர்துமாதா ஆலயம் முன்பாக நடந்த உண்ணாவிரதத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். இந்த பிரச்னையில் அரசு முடிவெடுக்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடரப்போவதாக தெரிவித்தனர். உண்ணாவிரதம் நடக்கும் இடிந்தகரைக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இடிந்தகரை, கூடங்குளம் உள்ளிட்ட பல்வேறு கடலோரமீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். இன்று (திங்கள்கிழமை) முதல் பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்புவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளனர்.