/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இலவச ஆடு, மாடு திட்டம் : பரவுது எஸ்.எம்.எஸ்.,இலவச ஆடு, மாடு திட்டம் : பரவுது எஸ்.எம்.எஸ்.,
இலவச ஆடு, மாடு திட்டம் : பரவுது எஸ்.எம்.எஸ்.,
இலவச ஆடு, மாடு திட்டம் : பரவுது எஸ்.எம்.எஸ்.,
இலவச ஆடு, மாடு திட்டம் : பரவுது எஸ்.எம்.எஸ்.,
ADDED : ஜூலை 29, 2011 11:04 PM
குஜிலியம்பாறை : தேர்தல் வாக்குறுதிப்படி, செப்., 15 முதல், ஏழைகளுக்கு ஆடு, மாடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அரசியல், சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப, எஸ்.எம்.எஸ்., களை பரப்புவது, தற்போது வாடிக்கையாவிட்டது. இதில், இலவச ஆடு, மாடு திட்டமும் தப்பவில்லை. இதுகுறித்து பரவும் எஸ்.எம்.எஸ்., கள்.
* அம்மா, ஆடு மாடு தருவதாக அறிவித்துள்ளார்கள். ஏன் தெரியுமா?
அவை 'அம்மா' என அன்போடு அழைப்பதால்.
* கோயில்களில் ஆடு வெட்ட தடை போட்ட அம்மா, இப்போது ஆடு, மாடு வழங்குகிறாராம். ஏன் தெரியுமா?
அப்ப வெட்டாததைதயும் சேர்த்து இப்ப வெட்ட.
* நிலம் இல்லாத ஏழைகளுக்கு மட்டும் தான், இலவச ஆடு, மாடாம். அப்படின்னா, அவங்க எங்கே போய் மேய்ப்பாங்க?
இதுபோல பலவித எஸ்.எம்.எஸ்., கள் உலாவுகின்றன.