ADDED : ஜூலை 17, 2011 01:10 AM
கோவை : கோவை ஸ்ரீசரஸ்வதி கலாலயா சார்பில் பரத நாட்டிய அரங்கேற்றம் பாரதிய வித்யாபவனில் நடந்தது.
கோவை பரதாலயம் இயக்குனர் அமுதா தலைமை வகித்தார். சென்னை த்ராயி பரதநாட்டிய பள்ளி இயக்குனர் ÷ஷாபனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோவை சிந்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர் கவுரி வரவேற்றார். ரம்யா, அருண் பிரகாஷ் ஆகியோரது பரத நாட்டியம் அரங்கேற்றப்பட்டது. இவர்கள் கோவை சரஸ்வதி கலாலயா இயக்குனர் முரளியிடம் முறைப்படி பரத நாட்டியம் கற்றுக் கொண்டனர். ரம்யாவும், அருண் பிரகாசும் இணைந்த பரத நாட்டியத்தில், புஷ்பாஞ்சலியும், அலரிப்பூவும், ஜோதிஸ்வரம், வர்ணம், கீர்த்தனை, படம், தில்லானா, மங்கலம் ஆகிய நிலைகளில் ஆடினர். நாட்டுவங்கம் முரளியும், பிரவீன் ஓக்கலும், வெங்கடேஷ் மிருதங்கமும், ரகுநாதன் புல்லாங்குழலும், சிவகாமி வயலினும் வாசித்தனர்.