/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பண்ருட்டியில் மாற்றுத் திறனாளிகள் தொடர் முழக்கப் போராட்டம்பண்ருட்டியில் மாற்றுத் திறனாளிகள் தொடர் முழக்கப் போராட்டம்
பண்ருட்டியில் மாற்றுத் திறனாளிகள் தொடர் முழக்கப் போராட்டம்
பண்ருட்டியில் மாற்றுத் திறனாளிகள் தொடர் முழக்கப் போராட்டம்
பண்ருட்டியில் மாற்றுத் திறனாளிகள் தொடர் முழக்கப் போராட்டம்
ADDED : செப் 20, 2011 08:53 PM
பண்ருட்டி : பண்ருட்டியில் மாற்றுத் திறனாளி பாதுகாப்போர் உரிமை சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
பண்ருட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 60 சதவீதம் மேல் ஊனம், 45 வயது பூர்த்தி, குடும்ப வருமானம் கணக்கீடு குறித்த விதிமுறைகளை தளர்த்திட வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
மாவட்டக் குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார். வைடிப்பாக்கம் ஆறுமுகம், சந்திரசேகர், முருகேசன், சதானந்தம், சிவநேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டச் செயலர் உதயகுமார், மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் குமார் உள்ளிட்டோர் பேசினர்.


