/உள்ளூர் செய்திகள்/கரூர்/அமைச்சர் திடீர் கட்டளை அ.தி.மு.க., வேட்பாளர்கள் வீடு, வீடாக செல்ல வேண்டும்அமைச்சர் திடீர் கட்டளை அ.தி.மு.க., வேட்பாளர்கள் வீடு, வீடாக செல்ல வேண்டும்
அமைச்சர் திடீர் கட்டளை அ.தி.மு.க., வேட்பாளர்கள் வீடு, வீடாக செல்ல வேண்டும்
அமைச்சர் திடீர் கட்டளை அ.தி.மு.க., வேட்பாளர்கள் வீடு, வீடாக செல்ல வேண்டும்
அமைச்சர் திடீர் கட்டளை அ.தி.மு.க., வேட்பாளர்கள் வீடு, வீடாக செல்ல வேண்டும்
ADDED : அக் 04, 2011 12:05 AM
லாலாப்பேட்டை: அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் கிருஷ்ணராயபுரம் மற்றும் பழைய ஜெயங்கொண்டாபுரத்தில் நடந்தது.
கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களில் முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை மக்கள் மத்தியில் அ.தி.மு.க., வினர் எடுத்து சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்க வேண்டும். சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை விட அதிக வெற்றியை உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கியுள்ள தாலிக்கு தங்கம், இலவச கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மற்றும் ஃபேன் குறித்த தகவல்கள் பிரச்சாரத்தில் இடம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நகர செயலாளர் தங்கதுரை, ஒன்றிய செயலாளர் முத்துசாமி, வேணுகோபால், மணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


