/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊராட்சி எழுத்தர்களுக்கு கிடுக்கிப்பிடிஊராட்சி எழுத்தர்களுக்கு கிடுக்கிப்பிடி
ஊராட்சி எழுத்தர்களுக்கு கிடுக்கிப்பிடி
ஊராட்சி எழுத்தர்களுக்கு கிடுக்கிப்பிடி
ஊராட்சி எழுத்தர்களுக்கு கிடுக்கிப்பிடி
ADDED : ஜூலை 27, 2011 01:29 AM
வடமதுரை:வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூர் ஒன்றிய, ஊராட்சி உதவியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர், குடிநீர் பராமரிப்பு அலுவலர்கள், ஊராட்சி உதவியாளர்களும் பங்கேற்றனர். பழனிச்சாமி எம்.எல். ஏ., பேசியது:இக்கூட்டத்தில் தெரிவித்த தகவல்கள் தவறாக இருந்தால் இப்போதே திருத்தி கொள்ளுங்கள். ஊராட்சி செயல்பாடுகளில் தெரு, குடிநீர் பிரச்னைகள் முக்கியம். தெருவிளக்கு, குடிநீர் பராமரிப்பில் அலட்சியம் காட்டினால், அதிகாரிகள் மூலம் நெருக்கடியை சந்திக்க நேரிடும். குடிநீர் பிரச்னையை உடனடியாக தீர்க்க வேண்டும், என்றார்.