/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பல்கலை மாணவியர் கால்பந்துபாரதியார் பல்கலை வெற்றிபல்கலை மாணவியர் கால்பந்துபாரதியார் பல்கலை வெற்றி
பல்கலை மாணவியர் கால்பந்துபாரதியார் பல்கலை வெற்றி
பல்கலை மாணவியர் கால்பந்துபாரதியார் பல்கலை வெற்றி
பல்கலை மாணவியர் கால்பந்துபாரதியார் பல்கலை வெற்றி
ADDED : செப் 14, 2011 01:40 AM
கோவை:பாரதியார் பல்கலை கல்லூரி மாணவியருக்கான கால்பந்துபோட்டியில்,
பாரதியார் பல்கலை அணி வென்று, லீக் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
பாரதியார் பல்கலை அனைத்து கல்லூரி மாணவியருக்கான கால்பந்து 'சாம்பியன்ஷிப்'
சரவணம்பட்டி சங்கரா கலை அறிவியல் கல்லூரி சார்பில் கல்லூரி மைதானத்தில்
நேற்று காலை துவங்கியது. ஈரோடு, கோபி, கோவை ஆகிய இடங்களை சேர்ந்த எட்டு
கல்லூரிகள் 'நாக் அவுட்-லீக்' முறை போட்டியில் பங்கேற்றன.
'நாக்அவுட்' முதல் போட்டியில் பாரதியார் பல்கலை 6-0 என்ற கோல் கணக்கில்,
கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியை வென்றது. பல்கலை அணியின் சோபனா மூன்று
கோல்கள் போட்டு'ஹாட்ரிக்' சாதனை புரிந்தார். நான்சி இரண்டு கோல்களும், அமலா
ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு போட்டியில், கோபி பி.கே.ஆர்.,கலை அறிவியல்
கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி.,கலை அறிவியல் கல்லூரியை
வென்றது. பி.கே.ஆர்.,கல்லூரியின் மஞ்சு, யசோதா ஆகியோர் தலா ஒரு கோல்
அடித்தனர். உடுமலைபேட்டை ஜி.வி.ஜி., கலை அறிவியல் கல்லூரி வராததாலும்,
போட்டிகள் நடத்தும் சங்கரா கலை அறிவியல் கல்லூரி பங்கேற்காததாலும், ஈரோடு
கொங்கு கல்லூரி மற்றும் கிருஷ்ணம்மாள் கல்லூரி அணிகள் லீக் போட்டியில்
விளையாட தகுதி பெற்றன.சங்கரா கலை அறிவியல் கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன்
போட்டியை துவக்கினார். கல்லூரி முதல்வர் சீதாலட்சுமி வரவேற்றார். இன்று
காலை லீக் போட்டியும், மாலையில் இறுதி லீக் போட்டியும் நடக்கின்றன.


