/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சோமாலியாவுக்கு உதவிட பா.ம.க.வலியுறுத்தல்சோமாலியாவுக்கு உதவிட பா.ம.க.வலியுறுத்தல்
சோமாலியாவுக்கு உதவிட பா.ம.க.வலியுறுத்தல்
சோமாலியாவுக்கு உதவிட பா.ம.க.வலியுறுத்தல்
சோமாலியாவுக்கு உதவிட பா.ம.க.வலியுறுத்தல்
ADDED : ஆக 13, 2011 01:26 AM
தென்காசி : பசி, பட்டினி மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சோமாலியா நாட்டு
மக்களுக்கு உதவிட வேண்டும் என பா.ம.க.,வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து
மாவட்ட பா.ம.க.கொள்கை பரப்பு தலைவர் நம்பிராஜன் விடுத்துள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது: ''சோமாலியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கலவரம்
நடந்து வருகிறது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் பசி, பட்டினியால் மடிந்து
வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஐந்து வயதிற்குட்பட்ட 29
ஆயிரம் குழந்தைகள் பசி, பட்டினியால் இறந்துள்ளது வேதனைக்குரியதாகும்.
அம்மக்களின் பசி, பட்டினியை போக்கி, தீவிரவாதத்தை அடக்க உலக நாடுகள் உடனே
நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியர்கள் அனைவரும் இதற்கு ஒருமித்த குரல்
கொடுக்க வேண்டும்'' என நம்பிராஜன் அறிக்கையில் கூறியுள்ளார்.


