Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி

சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி

சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி

சப்-கலெக்டர் அலுவலகம் ஜப்தி

ADDED : செப் 06, 2011 11:49 PM


Google News

பெரியகுளம்: நிலம் கையகப்படுத்தியதற்கான, நிவாரணத்தொகை வழங்காததால், பெரியகுளம் சப்- கலெக்டர் அலுவலகத்தில் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.



ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன், பழனிவாசன்.

இவர்களது 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, ஆண்டிபட்டி தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்காக, 1990ல் அரசு கையகப்படுத்தியது. கூடுதல் நிவாரணத்தொகை வழங்க கோரி, பெரியகுளம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 11 லட்சத்து 55 ஆயிரத்து 873 ரூபாய் வழங்குமாறு 2002ல் கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அரசு ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. சென்ட்டிற்கு 5,000 ரூபாய் வீதம் வழங்க 2010ல் மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. நிவாரணத்தொகை வழங்காததால்,பெரியகுளம் சப் -கோர்ட் நீதிபதி ஜெயக்குமார், பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி அலுவலக பொருட்கள் நேற்று ஜப்தி செய்யப்பட்டன. நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பேரில், ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us