சுப்ரீம் கோர்ட்டில் பாபா ராம்தேவ் தகவல்
சுப்ரீம் கோர்ட்டில் பாபா ராம்தேவ் தகவல்
சுப்ரீம் கோர்ட்டில் பாபா ராம்தேவ் தகவல்

புதுடில்லி : 'டில்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை கலைக்கச் செய்தது, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான்' என, ராம்தேவ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரத பந்தலுக்குள், போலீசார் நடத்திய தடியடி சம்பவங்களை, 'டிவி' சேனல்களில் பார்த்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தானாக இந்த வழக்கு குறித்து விசாரித்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கும், டில்லி போலீசுக்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. ராம்தேவின் பாரத் சுவாபிமான் அறக்கட்டளைக்கு நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும் படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், சுதந்திரகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
ராம்தேவ் தரப்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதாடினார். ''பிரச்னைக்குரிய நபரோ அல்லது குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட நபரோ ஒரு இடத்தில் இருந்தால், அவரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ராம்தேவ் மீது எந்த குற்றப்பின்னணியும் இல்லை.
அப்படி இருக்கும் போது, நள்ளிரவில், அவர் உண்ணாவிரதம் இருந்த பந்தலுக்குள் சென்ற போலீசார், அவரையும் அவரது ஆதரவாளர்களையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் என்ன?