மோசமான வானிலை: முதல்வர் சென்ற ஹெலிகாப்டரால் பரபரப்பு
மோசமான வானிலை: முதல்வர் சென்ற ஹெலிகாப்டரால் பரபரப்பு
மோசமான வானிலை: முதல்வர் சென்ற ஹெலிகாப்டரால் பரபரப்பு
ADDED : செப் 15, 2011 04:40 PM
ஐதராபாத்: மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஹெலிகாப்டரில் சென்ற ஆந்திர முதல்வர் கிரண்குமார்ரெட்டி நடுவானில் சிறிது நேரம் சிக்கிக்கொண்டார்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்திலிருந்து , ராஜமுந்திரிக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றார் கிரண்குமார்ரெட்டி , இதற்காக ஒரு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது மோசமான வானிலை காரணமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் நடுவானில் சிக்கி கொண்டதாக மதுராபுரி விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சுமார் 45 நிமிடங்கள் கழித்து அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு பத்திரமாக சென்றதாக கூறப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


