ADDED : செப் 29, 2011 01:15 AM
கோபிசெட்டிபாளையம்:தமிழ்நாடு வம்சராஜ் நாய்க்கர் நலச்சங்க மாநில செயற்குழு
கூட்டம் குருவரெட்டியூரில் நடந்தது.மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். மாநிலம் முழுவதும் சங்க கிளைகள் அமைத்து,
பெயர் பலகை வைத்தல் கொடியேற்று விழா நடத்துதல், உள்ளாட்சி தேர்தலில் ஒத்த
கருத்துயை கட்சிகளுக்கு ஆதரவளிப்பது, வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் தனித்து
போட்டியிடுவது, பல்வேறு பிரிவுகளில் இருந்து நாயக்கர் சமூகத்தினரை
ஒருங்கிணைத்து வம்சராஜ் நாய்க்கர் என்று சாதி சான்று வழங்க கோருதல் என
தீர்மானிக்கப்பட்டது.


