Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேர்வு நேரத்தில் பள்ளி முன் பட்டாசு வெடித்த அரசியல் கட்சியினர் :வேடிக்கை பார்த்த போலீஸார்

தேர்வு நேரத்தில் பள்ளி முன் பட்டாசு வெடித்த அரசியல் கட்சியினர் :வேடிக்கை பார்த்த போலீஸார்

தேர்வு நேரத்தில் பள்ளி முன் பட்டாசு வெடித்த அரசியல் கட்சியினர் :வேடிக்கை பார்த்த போலீஸார்

தேர்வு நேரத்தில் பள்ளி முன் பட்டாசு வெடித்த அரசியல் கட்சியினர் :வேடிக்கை பார்த்த போலீஸார்

ADDED : செப் 27, 2011 11:50 PM


Google News
கரூர்: கரூர் நகராட்சி அலுவலக வாசலில் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை வெடித்து புகையை கிளப்பினர்.

பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீஸார் கண்டுகொள்ளாததால் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள நகராட்சி பள்ளியில் காலாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். கரூர் நகராட்சிக்கு முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது. கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் நாள்தோறும் வேட்புமனு வாங்க வரும் கட்சி நிர்வாகிகள் கூட்டமும், வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், கரூர் நகராட்சி அலுவலகம் களை கட்டியுள்ளது. பெரும்பாலும் பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக தொடங்கி வருகிறது. வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ய தொடங்கும் முன், சம்பந்தப்பட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் வரும் போது பட்டாசு வெடித்து வரவேற்பு கொடுக்கின்றனர். இதனால் கரூர் நகராட்சி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் நகராட்சி அலுவலகத்துக்கு எதிரே, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தலைவர் பதவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்ய வரும் நிர்வாகிகள், கரூர் நகராட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து புகையை கிளப்புகின்றனர். நகராட்சி அலுவலம் எதிரே உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த சில நாட்களாக காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. தேர்வையொட்டி பள்ளியிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். நேற்று எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவர்களுக்கு ஆங்கிலம் இரண்டாவது தாளும், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு கணக்குப்பதிவியல், கணக்கு மற்றும் வரலாறு ஆகிய தேர்வு நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கரூர் நகராட்சி அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பல்வேறு கட்சியினர், பள்ளி வாசல் முன் பட்டாசு வெடித்து கொண்டாடத்தில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீஸார் கட்சியினர் பட்டாசு வெடிப்பதை கண்டுகொள்ளாமல் ஒதுங்கியே நின்றனர். தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். தேர்வு எழுதும் மாணவர்கள் வசதிக்காக கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்து ஆர்ப்பாட்டம் செய்வதை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தடை செய்ய வேண்டியது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us