15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு
15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு
15 ஆயிரத்து 361 பேர் இரண்டு நாட்களில் வேட்பு மனு
ADDED : செப் 23, 2011 11:56 PM
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, இரண்டு நாட்களில், 15 ஆயிரத்து 361 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் 17 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்கிறது. இதற்கான மனு தாக்கல், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் மனு தாக்கலின் போது, 1,056 பேர் பல்வேறு பதவிகளில் போட்டியிட, மனுக்களை தாக்கல் செய்தனர். இதை, தொடர்ந்து, இரண்டாவது நாளாக மனு தாக்கல் நேற்றும் நீடித்தது. இதில், 14 ஆயிரத்து 305 பேர் மனுவை தாக்கல் செய்தனர். இரண்டு நாட்களில் மொத்தம், 15 ஆயிரத்து 361 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வரும் நாட்களில், மனு தாக்கல் செய்ய உள்ளோர் எண்ணிக்கை, கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.