/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பார்த்தீனியம் செடிகளை அழிக்க 2 நாள் பயிற்சிபார்த்தீனியம் செடிகளை அழிக்க 2 நாள் பயிற்சி
பார்த்தீனியம் செடிகளை அழிக்க 2 நாள் பயிற்சி
பார்த்தீனியம் செடிகளை அழிக்க 2 நாள் பயிற்சி
பார்த்தீனியம் செடிகளை அழிக்க 2 நாள் பயிற்சி
ராசிபுரம்: 'பார்த்தீனியம் களைச் செடிகளை அளிக்க, இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது' என, எலச்சிப்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் லோகநாதபிரகாசம் தெரிவித்துள்ளார்.
கரும்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் போது, பார்த்தீனிய களைச் செடிகள் முளைக்காமல் தடுக்க, லிட்டருக்கு நான்கு கிராம் அட்ரசின் மருந்தை கலந்து தெளிக்க வேண்டும். பயிர் சாகுபடி இல்லாத இடங்களில் முளைத்துள்ள பார்த்தீனிய களைச்செடிகளை அழிக்க, லிட்டருக்கு 200 கிராம், சமையல் உப்புடன் 2 மில்லி டீ பால், அல்லது 10 கிராம் 2:4 டி., சோடியம் உப்புடன் 20 கிராம் அமோனியம் சல்பேட், இரண்டு மில்லி சோப்பு கரைசல் கலந்தும் செடிகள் மீது தெளிக்கலாம். 15 மில்லி கிளை போசேட்டுன் 20 கிராம் அமோனியம் சல்பேட், இரண்டு மில்லி சோப்பு கரைசல் கொண்டும் அழிக்கலாம். லச்சிபாளையம் யூனியனுக்கு உட்பட்ட சின்னமணலி, மாவுரெட்டிப்பட்டி, ராயர்பாளையம், உஞ்சனை உள்ளிட்ட கிராமப்புறங்களில் பார்த்தீனியம் களைச் செடிகளை அழிக்க இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


