/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சிகோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
கோவில்பட்டியில் முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி
கோவில்பட்டி : கோவில்பட்டியில் அதிமுக.,வினருக்கு சீட் கொடுக்காமல் சட்டசபை தேர்தலில் மாற்றுக்கட்சிக்கு வேலை செய்தவர்களுக்கு கவுன்சிலர் சீட் கொடுத்ததை கண்டித்து முன்னாள் கவுன்சிலர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை கோவில்பட்டி ஏகேஎஸ் தியேட்டர் ரோட்டிலுள்ள நகர அதிமுக.,அலுவலகம் முன்பு வந்தார். திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் நின்ற அதிமுக.,வினர் சுல்தானை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். எனினும் அவர் சமாதானம் அடையாமல் சம்பவ இடத்திற்கு எம்எல்ஏ.,வரும்வரை தீக்குளிப்பு முயற்சியை கைவிடப்போவதில்லை என்று பிடிவாதமாக இருந்தார். மேலும் இவருடன் தற்போதைய 5வது வார்டு கவுன்சிலர் விமலாதேவி, நகர எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் வெள்ளைச்சாமி, கந்தசாமி, ராஜகோபால் ஆகியோரும் தங்கள் தரப்பு அதிருப்தியை வெளிக்காட்ட சுல்தானுடன் ரோட்டில் அமர்ந்ததால் பரபரப்பு அதிகரித்தது. இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து சுல்தானிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதற்கு அதிமுக.,வின் முக்கிய புள்ளிகளும் ஆதரவாக உள்ளனர். கோவில்பட்டி அதிமுக.,வின் குளறுபடிகளை தலைமைக்கு தெரியப்படுத்தும் விதத்தில் தீக்குளிக்க முயன்றேன் தடுத்துவிட்டனர். எனக்கு கிடைக்காவிட்டாலும் கட்சியின் உண்மையான தொண்டர்களுக்கு கிடைத்திருந்தால் அதற்கு பரிந்துரை செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். எனக்கு தற்போது 65 வயதாகிறது. நான் அதிமுக.,வில் இத்தனை ஆண்டுகள் உழைத்துவிட்டு வேறு கட்சிக்கு போகவும் முடியாது, இங்கு நடைபெறும் குளறுபடியால் ஜெ.,வுக்கும், அரசுக்கும் கெட்டபெயர் ஏற்படும் என்பதால் எனது உயிரை இழந்தாவது தலைமைக்கு தெரிய வைக்க வேண்டுமென்று தான் தீக்குளிக்க முயன்றேன் என முன்னாள் கவுன்சிலர் சுல்தான் கூறினார். அப்போது அதிமுக.,நகர செயலாளர் விஜயபாண்டியன், முன்னாள் நகர செயலாளர் முத்தையா உட்பட ஏராளமான அதிமுக.,வினர் இருந்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து தலைமைக்கு தெரியப்படுத்தியதைடுத்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 13வது வார்டு வேட்பாளர் மாற்றப்பட்டு சுல்தான் மனைவி நூர்ஜஹான் வேட்பாளராக அறிவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக கோவில்பட்டி அதிமுக.,நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தீக்குளிக்க முயற்சி செய்த சுல்தான் மீது டவுன் விஏஓ., ராஜசேகரன் கோவில்பட்டி மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.