UPDATED : செப் 13, 2011 07:10 AM
ADDED : செப் 13, 2011 07:07 AM
தூத்துக்குடி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் 22 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
நேற்று 17 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 6.30 மணியளவில், வல்லநாடு போலீஸ் துப்பாக்கி சுடு தளத்தில் இருந்து ஜான்பாண்டியன் மற்றும் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டனர். பரமகுடியில் நடந்த இம்மானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும்போது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.