ADDED : ஆக 02, 2011 01:22 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் முருகேஷ், தனித்துணை கலெக்டர் ராஜாராம், மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் கனகராஜ், பிற்பட்டோர் நல அலுவலர் சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர். கலெக்டர் சகாயத்திடம் 663 மனுக்கள் வழங்கப்பட்டன. அவர் கூறுகையில், ''பட்டா மாறுதலில் தாமதம் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவார காலத்திற்குள் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளும் தொழிலதிபர் ஆக நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். கடந்த மாதம் வந்த மனுக்கள், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர் நாள் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி நூறு சதவீதம் செயல்படுத்திய மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஜெயலட்சுமியை பாராட்டினார்.