/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சங்கராபுரம் பகுதியில் ரெய்டுரூ. 2 லட்சம் சாராயம் பறிமுதல்சங்கராபுரம் பகுதியில் ரெய்டுரூ. 2 லட்சம் சாராயம் பறிமுதல்
சங்கராபுரம் பகுதியில் ரெய்டுரூ. 2 லட்சம் சாராயம் பறிமுதல்
சங்கராபுரம் பகுதியில் ரெய்டுரூ. 2 லட்சம் சாராயம் பறிமுதல்
சங்கராபுரம் பகுதியில் ரெய்டுரூ. 2 லட்சம் சாராயம் பறிமுதல்
ADDED : செப் 15, 2011 03:47 AM
சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டதில் 2
லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக
37 பேர் கைது செய்யப்பட்டனர்.திருக்கோவிலூர் டி.எஸ்.பி., ÷ லாகநாதன்
உத்தரவின்பேரில் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர்கள்
ரவிச்சந்திரன், குணசேகரன், கிரி, குப்பாச்சாரி, ஜெய்சங்கர் மற்றும்
போலீசார் அதிரடி சாராய வேட்டை நடத்தினர். இதன்படி அரசம் பட்டு,
சேஷசமுத்திரம், கொசப்பாடி, கிடங்குடயாம்பட்டு, சங்கராபுரம் காலனி,
தியாகராஜபுரம், எஸ்.வி.பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சாராயம் விற்பனையில்
ஈடுபட்ட அர்ச்சுணன், லில்லி, ஜெயராமன், ராஜாத்தி, அய்யாக்கண்ணு, தனம்,
ஏழுமலை, தனசேகரன், லட்சுமி உள்ளிட்ட 37 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பிளாஸ்டிக் கேன்களில் பதுக்கி வைத்திருந்த இரண்டு லட்சம்
ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராயத்தை போலீசார் கைப்பற்றி
அழித்தனர்.


