ADDED : ஆக 01, 2011 11:04 PM
திண்டுக்கல் : திண்டுக்கலில் 50 வயது மனைவி மீது சந்தேகப்பட்ட கணவன், கோடாரியால் வெட்டி கொன்றார்.
இங்குள்ள நல்லாம்பட்டி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (55); மனைவி செல்வி (50).
மகளுக்கு திருமணமாகி விட்டது. இரண்டு மகன்களும் படிக்கின்றனர். செல்வி கட்டட வேலை செய்தார். அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், போதையில் தகராறு செய்வார். நேற்று காலை 6 மணிக்கு தகராறு ஏற்பட்டு, மனைவியை கொன்றார். அவரை இன்ஸ்பெக்டர் தெய்வம் கைது செய்தார்.