/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாமாவுக்கு பிரச்சாரம் நெப்போலியன் புறக்கணிப்பு தி.மு.க.,வினர் ஆதங்கம்மாமாவுக்கு பிரச்சாரம் நெப்போலியன் புறக்கணிப்பு தி.மு.க.,வினர் ஆதங்கம்
மாமாவுக்கு பிரச்சாரம் நெப்போலியன் புறக்கணிப்பு தி.மு.க.,வினர் ஆதங்கம்
மாமாவுக்கு பிரச்சாரம் நெப்போலியன் புறக்கணிப்பு தி.மு.க.,வினர் ஆதங்கம்
மாமாவுக்கு பிரச்சாரம் நெப்போலியன் புறக்கணிப்பு தி.மு.க.,வினர் ஆதங்கம்
ADDED : அக் 10, 2011 02:56 AM
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மாமா உறவுமுறையான நேருவுக்கு ஆதரவாக, மத்திய இணையமைச்சர் நெப்போலியன் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற எதிர்பார்ப்பு, மாவட் ட தி.மு.க.,வினர் மத்தியில் மேலோங்கியுள்ளது.திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல், வரு ம் 13ம் தேதி நடக்கிறது.
இதில், தி.மு. க., சார்பில் முன்னாள் அமைச்சர் நேருவும், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., பரஞ்ஜோதியும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதிக்கு ஆதரவாக, 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நில அபகரிப்பு வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு ஆதரவாக, முன்னாள் தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அடங்கிய குழு தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.சிறையில் இருக்கும் நேருவால், பிரச்சாரத்துக்கு வரமுடியாத நிலையில், தி.மு.க.,வில் தற்போது மக்களைக்கவரும் தலைவராக இருக்கும் ஸ்டாலின், நேற்று முதல் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகியுள்ளார். மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நேருவை, 'மாமா' என்று அழைக்கும் உறவு முறை கொண்ட மத்திய அமைச்சர் நெப்போலியன், இதுவரை பிரச்சாரத்துக்கு வரவில்லை.தற்போது, இருவருக்கும் இடையே குடும்ப பகை காரணமாக பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. இது, கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட எதிரொலித்தது.எனவே, நட்சத்திர பேச்சாளராக உருவெடுத்துள்ள நெப்போலியன், நேருவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருவாரா, பகையை மனதில் வைத்துக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிப்பாரா, என்ற கேள்வி தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், திருச்சியில் நடந்த அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியபோது, 'நெப்போலியன், கடலூர் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பினாமிகள் பெயரில் வாங்கியுள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும்' என்று பேசினார்.அதற்கு பயந்துதான் நெப்போலியன் தேர்தல் பிரச்சாரத்திலிருந்து பின்வாங்கி விட்டாரோ என்ற சந்தேகமும், தி.மு.க.,வினருக்கு எழுந்துள்ளது


