ADDED : அக் 10, 2011 02:49 AM
கூடலூர் : 'கூடலூர் தனியார் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் 1000 ரூபாய் கருணை தொகை வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.கூடலூர் தாலுகா தனியார் எஸ்டேட் ஏ.டி.பி., தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் கூடலூரில் நடந்தது.கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:தனியார் எஸ்டேட் நிர்வாகம் தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனசுடன் 1000 ரூபாய் கருணை தொகை வழங்க வேண்டும்; இத்தொகையை தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக வழங்க வேண்டும்.சில தனியார் எஸ்டேட் நிர்வாகம் தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் சுகாதார வசதிகளை முறையாக பராமரிப்பு செய்வதில்லை; தொழிலாளர் துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தலைவர் அந்தோணி வரவேற்றார். கூடலூர் செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். துணை தலைவர் முருகையா, கிளை செயலாளர்கள் டேவிட், ஆறுமுகம், செயலாளர் மொய்தீன், நிர்வாகிகள் முத்தையா, சக்கீர், முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.


