/உள்ளூர் செய்திகள்/சேலம்/நிலம் அபகரிப்பு வழக்கில் அதிரடி நகராட்சி துணை தலைவரின்மனைவி உள்பட 2 பேர் கைதுநிலம் அபகரிப்பு வழக்கில் அதிரடி நகராட்சி துணை தலைவரின்மனைவி உள்பட 2 பேர் கைது
நிலம் அபகரிப்பு வழக்கில் அதிரடி நகராட்சி துணை தலைவரின்மனைவி உள்பட 2 பேர் கைது
நிலம் அபகரிப்பு வழக்கில் அதிரடி நகராட்சி துணை தலைவரின்மனைவி உள்பட 2 பேர் கைது
நிலம் அபகரிப்பு வழக்கில் அதிரடி நகராட்சி துணை தலைவரின்மனைவி உள்பட 2 பேர் கைது
ADDED : அக் 02, 2011 01:07 AM
சேலம்: ஆத்தூர் அருகே, மூதாட்டியிடம் இருந்து, மூன்று ஏக்கர் நிலத்தை அபகரித்த தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவரின் மனைவி உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜோதி (60). இவருக்கு, அதே பகுதியில், மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. தி.மு.க.,வை சேர்ந்த, நரசிங்கபுரம் (3ம் நிலை) நகராட்சி துணைத்தலைவர் காட்டுராஜா, அரசு நிதியுதவி பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறியதால், ஜோதி, கடந்த 2004 டிசம்பர் 1ம் தேதி தன்னுடைய நிலத்தை, காட்டுராஜா பெயருக்கு 'பவர் ஆஃப் அட்டர்னி' செய்து கொடுத்துள்ளார். அதையடுத்து, அந்த நிலத்தை, 2009 அக்டோபர் 9ம் தேதி, காட்டுராஜா தனது மனைவி செல்வி பெயரில் கிரயம் செய்தார். பின்னர், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வேலவனுக்கு நிலம் கிரயம் செய்து கொடுக்கப்பட்டது.
அரசு நிதி உதவியும் பெற்றுத்தராமல், நிலத்தையும் அபகரித்தது குறித்து ஜோதி, ஆத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. வழக்கில் இருந்து தப்பிக்க, ஜோதிக்கு, 2.25 லட்சம் ரூபாய் கடன் கொடுத்ததாக, போலியான ஆவணத்தை காட்டுராஜா தயார் செய்துள்ளார். மேலும், வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து, மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனிடம், ஜோதி புகார் செய்தார். புகாரின் பேரில், நிலஅபகரிப்பு மீட்புகுழு டி.எஸ்.பி., மோகன்குமார் தலைமையில் விசாரணை நடந்தது. விசாரணையில், கடன் கொடுத்ததாக, காட்டுராஜா, போலி ஆவணம் தயார் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக, நகராட்சி துணைத்தலைவர் காட்டுராஜா, அவரது மனைவி செல்வி, நிலத்தை வாங்கிய வேலவன் ஆகிய மூவர் மீதும், 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து செல்வி, வேலவன் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவான காட்டுராஜாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


