/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளர் பொன் இனிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பொன் இனிதா நிருபர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி மாநகராட்சி பகுதியின் மேம்பாட்டிற்கு திமுக தலைவர் கருணாநிதி எவ்வளவோ திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடந்த வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி ஓட்டு கேட்போம். தூத்துக்குடி மாநகராட்சியில் முக்கிய பிரச்னையாக உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் வழங்குவதற்கு வேண்டிய முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படும்.இதே போல் சுகாதார வசதி, ரோடு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக தீர்ப்பதற்கு வே ண்டிய நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்இவ்வாறு அவர் தெரிவித்தார். . வேட்பாளர் பொன் இனிதாவிற்கு அசையும் சொத்து 41 லட்சத்து 49 ஆயிரத்து 865, அவரது கணவர் மாரியப்பன் பெயரில் 52 லட்சத்து 11 ஆயிரத்து 268 ரூபாயும். அசையும் சொ த்து வேட்பாளர் பெயரில் 40 லட்சம், அவரது கணவர் பெயரில் 2 கோடியே 20 லட்சம் இருப்பதாக சொத்து விபரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.