கி.கிரி நகராட்சியில் கை சின்னம் யாருக்கு : மூன்று காங்கிரசார் போட்டியால் குழப்பம்
கி.கிரி நகராட்சியில் கை சின்னம் யாருக்கு : மூன்று காங்கிரசார் போட்டியால் குழப்பம்
கி.கிரி நகராட்சியில் கை சின்னம் யாருக்கு : மூன்று காங்கிரசார் போட்டியால் குழப்பம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் சார்பில், மூன்று பேர், கட்சியின் அங்கீகாரப் படிவத்துடன் மனு தாக்கல் செய்துள்ளதால், யாரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜாவித் என்பவரும், தேர்தலில் போட்டியிட, கட்சியால் அங்கீகரிக்கப்படும், 'பி' படிவத்துடன், தேர்தல் நடத்தும் அலுவலரை நேற்று சந்தித்தார். இது போன்று, முபாரக் என்பவரும், படிவத்துடன் வந்தார். இவர்கள் மூவரின் விண்ணப்பத்தையும், தேர்தல் நடத்தும் அலுவலர் பெற்றுக் கொண்டார்.
இது குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி கமிஷனர் லோகநாதனிடம் கேட்டபோது, ''இது குறித்து, இப்போது எதுவும் கூற முடியாது. வேட்பு மனுக்கள் பரிசீலனையில் தான், யாருக்கு கை சின்னம் வழங்க முடியும் என்பது தெரிய வரும்'' என்று கூறினார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய, ஒரே கட்சியைச் சார்ந்த பலரும், ஒரே இடத்தில் மனு தாக்கல் செய்திருந்தாலும், கட்சியே அங்கீகரித்து வழங்கக் கூடிய, 'பி' படிவத்துடன், மூன்று பேர் மனு தாக்கல் செய்திருப்பது, காங்கிரசின் கோஷ்டிப் பூசலின் உச்ச கட்டத்தைக் காட்டியது.