ADDED : செப் 29, 2011 06:37 PM
புதுடில்லி : பிரணாப்-சிதம்பரம் கூட்டுப்பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பா.ஜ., கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த அக்கட்சி செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, இந்த கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு போதுமானதாக இல்லை. சிதம்பரம் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும். இதில் பா.ஜ. <உறுதியாக உள்ளது என்று அவர் கூறினார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்து கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்த உள்ளார்.