Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் 12 கிலோ நகை கொள்ளை

காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் 12 கிலோ நகை கொள்ளை

காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் 12 கிலோ நகை கொள்ளை

காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் 12 கிலோ நகை கொள்ளை

ADDED : செப் 28, 2011 08:32 AM


Google News
சீர்காழி: நாகை- சீர்காழி ‌பைபாஸ் சாலையில் நள்ளிரவில் காரில் வந்த நகைக்கடை அதிபரிடம் மர்ம ஆசாமிகள் வழிமறித்து துப்பாக்கி முனையில் 12 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுன்குமார். இவர் நகைக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று நேற்று நள்ளிரவில் காரில் 12 கிலோ நகைகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது நாகை- சீர்காழி பைபாஸ் சாலையில் காரை வழிமறித்த சில மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 12 கிலோ நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us