Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்ட கவுன்சிலர் "சீட்' மறுப்பு அ.தி.மு.க., பிரமுகர் அதிருப்தி

மாவட்ட கவுன்சிலர் "சீட்' மறுப்பு அ.தி.மு.க., பிரமுகர் அதிருப்தி

மாவட்ட கவுன்சிலர் "சீட்' மறுப்பு அ.தி.மு.க., பிரமுகர் அதிருப்தி

மாவட்ட கவுன்சிலர் "சீட்' மறுப்பு அ.தி.மு.க., பிரமுகர் அதிருப்தி

ADDED : செப் 27, 2011 11:38 PM


Google News

அவலூர்பேட்டை : முன்னாள் எம்.எல்.ஏ., வுக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த கட்சி பிரமுகரை சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர்.மேல்மலையனூர் ஒன்றியத்திற்குட்பட்ட 35 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.,வில் கடும் போட்டி நிலவியது.

இறுதியில் முன்னாள் எம்.எல். ஏ., தமிழ்மொழி ராஜதத்தனுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த அவலூர்பேட்டை கிளை ஜெ., பேரவை செயலாளர் வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவரது மனைவி விஜயகுமாரி கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒன்றிய குழுவின் துணை சேர்மனாகவும் இருந்தார்.தற்போது மாவட்ட கவுன்சிலருக்கான சீட் ஒதுக்கப்படாததால் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்ய வெங்கடேசன் நேற்று மேல்மலையனூர் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வந்தார்.தகவலறிந்ததும் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் புண்ணியமூர்த்தி விரைந்து சென்று, வெங்கடேசன் மற்றும் ஆதரவா ளர்களை சமாதானம் செய்து திருப்பி அனுப்பினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us