Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/அரசு டாக்டர்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்: இயக்குநர்

அரசு டாக்டர்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்: இயக்குநர்

அரசு டாக்டர்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்: இயக்குநர்

அரசு டாக்டர்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்: இயக்குநர்

ADDED : செப் 23, 2011 01:08 AM


Google News
பெரம்பலூர்: ''அரசு டாக்டர்கள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும்,'' என சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

, சுகாதாரத்துறை அமைப்பு திட்ட இயக்குநர் பங்கஜ்குமார்பன்சால் தலைமையில் பெரம்பலூர் கலெக்டர் தரேஸ்அஹமது முன்னிலையில் சென்னை துணை இயக்குநர் டாக்டர் விவேக்குமார், டாக்டர்கள் ஜூலியா, ராஜா ஆகியோர் அடங்கிய டாக்டர்கள் குழுவினர் வேப்பூர், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதல், காலிப்பணியிடங்கள், மகப்பேறு மருத்துவ பிரிவிற்கு கூடுதல் வசதி ஏற்படுத்துதல், மருத்துவமனை உள்வளாக பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் கழிவுநீர் வெளியேற்ற வசதிகளை மேம்பாடு செய்தல் போன்றவை குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் ஏழை-எளிய மக்களின் சுகாதாரத்தில் மிகுந்த அக்கரை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்போடு செயல்படுத்தி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக பல்வேறு நவீன சிகிச்சை வசதிகள் அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு டாக்டர்கள் தங்களை எந்த நேரத்திலும் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து சிகிச்சை பெற அணுகுவதற்கு ஏதுவாக செயலாற்றிட வேண்டும். பொது மக்களின் நம்பிக்கையை அரசு டாக்டர்கள் பெற வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். அரசு டாக்டர்கள் குறித்த நேரத்தில் பணியை மேற்கொண்டு செயலாற்றிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவ கழிவு பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவது குறித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் பங்கஜ்குமார்பன்சால் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) நடராஜன், இணை இயக்குநர் (பொறுப்பு) மனோகரன், துணை இயக்குநர் மோகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us