சிறுமி உட்பட மூவரின் உயிரைப்பறித்த கள்ளக்காதல்
சிறுமி உட்பட மூவரின் உயிரைப்பறித்த கள்ளக்காதல்
சிறுமி உட்பட மூவரின் உயிரைப்பறித்த கள்ளக்காதல்
ADDED : செப் 20, 2011 11:43 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கள்ளக்காதல் அம்பலமானதால் சிறுமிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி, தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த தாப்பாத்தி முத்துகிருஷ்ணன் மனைவி அய்யம்மாள்(30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். இரண்டு ஆண்டிற்கு முன் முத்துகிருஷ்ணன் இறந்துவிட்டார். அய்யம்மாள் விளாத்திகுளத்தில் வாடகை வீட்டில் பிள்ளைகளுடன் வசித்துவந்தார். கட்டட தொழிலுக்கு அய்யம்மாள் சென்றபோது அவருக்கும், விளாத்திகுளம் கட்டட தொழிலாளி பொன்மாடசாமிக்கும்(27), கடந்த மூன்று மாதத்திற்கு முன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியது. பொன்மாடசாமிக்கு, திருமதி என்ற மனைவியும் இருபிள்ளைகளும் உள்ளனர். இதையறிந்த மனைவி, குடும்பத்தினர் அவரை கண்டித்தனர். இப்பிரச்னை காரணமாக பொன்மாடசாமி தனது வீட்டிற்கு செல்லாமல், அய்யம்மாள் வீட்டிலேயே தங்கினார். இவர்களது கள்ளக்காதல் அந்த வீட்டு உரிமையாளருக்கும் தெரிந்ததால், அவர் வீட்டை காலி செய்ய வலியுறுத்தினார். இதனால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து அவர்கள் அய்யம்மாளின் மகள் அழகுலட்சுமி(11), மகன் பாலமுருகன்(6) ஆகியோருக்கு தந்தனர். பின்னர், அந்த விஷத்தை அய்யம்மாள், பொன்மாடசாமியும் குடித்தனர். நேற்று காலை நீண்ட நேரமாகியும் இவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சிறிது நேரம் கழித்து , பொன்மாடசாமி மனைவி திருமதி, அந்த வீட்டு கதவை திறந்தார். அங்கே, பொன்மாடசாமி, அய்யம்மாள், இவரது மகள் அழகுலட்சுமி இறந்துகிடந்தனர். மயங்கிக்கிடந்த பாலமுருகன், உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். விளாத்திகுளம் போலீசார் விசாரித்தனர்.