ADDED : செப் 20, 2011 08:58 PM
திட்டக்குடி : திட்டக்குடி அருகே அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டரை வருவாய் துறையினர் கைப்பற்றினர்.
திட்டக்குடி வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக வந்த தகவலையடுத்து தாசில்தார் சையத் ஜாபர், மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொரக்கவாடி வெள்ளாற்றில் இருந்து பனையாந்தூர் நோக்கிச் சென்ற டிராக்டரை சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. உடன் கொரக்கவாடியைச் சேர்ந்த ராமசாமிக்குச் சொந்தமான டிராக்டரை பறிமுதல் செய்தனர்.


