/உள்ளூர் செய்திகள்/கடலூர்/போலீஸ் சமரசத்தில் காதல் ஜோடிக்கு திருமணம்போலீஸ் சமரசத்தில் காதல் ஜோடிக்கு திருமணம்
போலீஸ் சமரசத்தில் காதல் ஜோடிக்கு திருமணம்
போலீஸ் சமரசத்தில் காதல் ஜோடிக்கு திருமணம்
போலீஸ் சமரசத்தில் காதல் ஜோடிக்கு திருமணம்
ADDED : செப் 20, 2011 08:57 PM
சிதம்பரம் : போலீஸ் சமரசத்தின் பேரில் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது.
சிதம்பரம் புதுப்பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சுரேஷ், 25; கார் டிரைவர். இவர் பிரம்மராயர் கோவில் தெருவைச் சேர்ந்த முத்து பாண்டியன் மகள் பாண்டிசெல்வியை, 20 கடந்த இரண்டு ஆண்டாக காதலித்து வந்தார். இந்நிலையில் பாண்டிசெல்வியை திருமணம் செய்து கொள்ள சுரேஷ் மறுத்தார். பாண்டிசெல்வி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்ததின்பேரில் போலீசார் இருவரின் பெற்றோர்களை அழைத்து சமரசம் செய்து வைத்ததன் பேரில் சுரேஷ் - பாண்டிச்செல்விக்கு நேற்று பிரம்மராயர்கோவிலில் திருமணம் நடந்தது.


