Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/கலெக்டர் ஆஃபீஸில் காதல் ஜோடிக்கு தர்ம அடி

கலெக்டர் ஆஃபீஸில் காதல் ஜோடிக்கு தர்ம அடி

கலெக்டர் ஆஃபீஸில் காதல் ஜோடிக்கு தர்ம அடி

கலெக்டர் ஆஃபீஸில் காதல் ஜோடிக்கு தர்ம அடி

ADDED : செப் 20, 2011 01:03 AM


Google News

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஆட்டோவில் வந்த நபர்கள், காதல் ஜோடிக்கு தர்ம அடி கொடுத்து, பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, போலீஸ் கமிஷனருக்கு, கலெக்டர் மகரபூஷணம் உத்தரவிட்டார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், காலை முதல் மக்கள் கூட்டம் அதிகப்படியாக காணப்பட்டது. மாலை, 2 மணியளவில், சேலம் சின்னக்கொல்லப்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர்(24), தனியார் நிறுவன ஊழியர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுகன்யா(19) இருவரும் வந்தனர். கலெக்டரிடம், மூன்று ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டோம், பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கேட்டனர். மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு, கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார். அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் சாப்பிட சென்றதால், காதல் ஜோடி அங்கு வராண்டாவில் வேடிக்கை பார்த்தபடி வலம் வந்தனர். கலெக்டர் அலுவலகத்தில் காதல் ஜோடி சுற்றித்திரிவது பற்றி, பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. ஆட்டோவில், 10 பேர் கொண்ட கும்பல் கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்தது.



அங்கு நின்று கொண்டிருந்த, ராஜசேகர், சுகன்யா இருவரையும் சரமாரியாக தாக்கினர். பின், சுகன்யாவை அந்த கும்பல் தூக்கி சென்றது. கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலெக்டர் அலுவலகத்தில், பாதுகாப்பு பணியில் அப்போது போலீஸார் யாரும் இல்லை. இந்த சம்பவம் குறித்து கலெக்டர் மகரபூஷணம் கவனத்துக்கு சென்றது. மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்தை தொடர்பு கொண்ட கலெக்டர், உடனடியாக அந்த கும்பல் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, மாவட்ட சமூக நல அலுவலர் பேபிகீதாஞ்சலி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆட்டோவில் வந்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us