/உள்ளூர் செய்திகள்/சேலம்/கலெக்டர் ஆஃபீஸில் காதல் ஜோடிக்கு தர்ம அடிகலெக்டர் ஆஃபீஸில் காதல் ஜோடிக்கு தர்ம அடி
கலெக்டர் ஆஃபீஸில் காதல் ஜோடிக்கு தர்ம அடி
கலெக்டர் ஆஃபீஸில் காதல் ஜோடிக்கு தர்ம அடி
கலெக்டர் ஆஃபீஸில் காதல் ஜோடிக்கு தர்ம அடி
சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஆட்டோவில் வந்த நபர்கள், காதல் ஜோடிக்கு தர்ம அடி கொடுத்து, பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்கு நின்று கொண்டிருந்த, ராஜசேகர், சுகன்யா இருவரையும் சரமாரியாக தாக்கினர். பின், சுகன்யாவை அந்த கும்பல் தூக்கி சென்றது. கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களிடையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கலெக்டர் அலுவலகத்தில், பாதுகாப்பு பணியில் அப்போது போலீஸார் யாரும் இல்லை. இந்த சம்பவம் குறித்து கலெக்டர் மகரபூஷணம் கவனத்துக்கு சென்றது. மாநகர போலீஸ் கமிஷனர் சொக்கலிங்கத்தை தொடர்பு கொண்ட கலெக்டர், உடனடியாக அந்த கும்பல் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, மாவட்ட சமூக நல அலுவலர் பேபிகீதாஞ்சலி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆட்டோவில் வந்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.


