/உள்ளூர் செய்திகள்/சேலம்/மின் ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை சீரமைப்பில் சிக்கல்மின் ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை சீரமைப்பில் சிக்கல்
மின் ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை சீரமைப்பில் சிக்கல்
மின் ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை சீரமைப்பில் சிக்கல்
மின் ஊழியர் பற்றாக்குறையால் மின்தடை சீரமைப்பில் சிக்கல்
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் மின் ஊழியர்கள் பற்றாக்குறையால், அடிக்கடி ஏற்படும் மின் தடையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, 3 மணிக்கு ஏற்பட்ட மின் தடை, இரவிலும் தொடர்ந்தது. இதனால், பனமரத்துப்பட்டி, காந்திநகர், கோம்பைக்காடு உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியது. மின் தடையால் அவதிப்பட்ட மக்கள், பனமரத்துப்பட்டி மின் வாரிய அலுவலகத்திற்கு ஃபோன் செய்தனர். அலுவலகத்தில் ஃபோன் எடுக்கவே இல்லை. அதனால், மின் தடையை சரி செய்ய யாரிடம் முறையிடுவது என, பொதுமக்கள் தவித்தனர். பகல் நேரத்தில் மின் தடையை சரி செய்ய ஊழியர்கள் இல்லாததால், இரவில் வெகு நேரம் வரை, மின் தடை ஏற்பட்ட இடத்தை தேடி அலைந்த ஊழியர்கள் இரவு, 11 மணிக்கு மேல் மின் தடையை சரி செய்தனர். பனமரத்துப்பட்டி மின் வாரிய அலுவலகத்திற்கு தேவையான ஊழியர்களை நியமிக்க, உயர் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் நுகர்வேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


