/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/இறந்தவர் பெயரில் போலி பத்திரம்: மூவர் கைதுஇறந்தவர் பெயரில் போலி பத்திரம்: மூவர் கைது
இறந்தவர் பெயரில் போலி பத்திரம்: மூவர் கைது
இறந்தவர் பெயரில் போலி பத்திரம்: மூவர் கைது
இறந்தவர் பெயரில் போலி பத்திரம்: மூவர் கைது
ADDED : செப் 19, 2011 10:36 PM
திண்டுக்கல் : இறந்தவர் பெயரில் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரித்த தந்தை, தாய், மகள் குடும்பத்துடன் போலீசார் கைது செய்தனர்.
கன்னிவாடி அருகே வெள்ளமரத்துப்பட்டியை சேர்ந்தவர் மகாலட்சுமி,36. இவர், அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது: எனது தந்தை பழனியப்பன், தாய் நாகம்மாளுக்கு சொந்தமான வீட்டுமனை நிலம் கோதவாலி கிராமத்தில் 380 சதுரடி உளளது. இதை எனது தந்தை, தாய் இறந்த பின்பு, கோதவாலியை சேர்ந்த கருப்பணன்,65, இவரது மனைவி சுப்பம்மாள்,60 ஆகியோர் எனது தந்தை பழனியப்பன் நிலத்தை அவர்களுக்கு எழுதி தந்தது போல் போலி பத்திரம் தயாரித்து அபகரித்துக்கொண்டனர்.
பின் இந்த பத்திரத்தை சுப்பம்மாள் தனது மகள் சரஸ்வதி பெயரில் தான செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்துவிட்டனர். தனக்கு சொந்தமான இடத்தை போலியாக பத்திரம் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இது குறித்து விசாரித்த திண்டுக்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., ராஜகோபால், போலிபத்திரம் தயாரித்த தந்தை, தாய், மகளை கைது செய்தனர்.தற்கொலைஅம்பிளிக்கை : பெரியகோட்டை தோட்டத்து சாலையைச் சேர்ந்தவர் தண்டபாணி 60. இவருடைய மகன் ஒருவர் ஊனமாகவும், மனைவி இறந்துவிட்டதாலும் வாழ்க்கையில் வெறுப்புற்று விஷ மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.