Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை

தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை

தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை

தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை

ADDED : செப் 18, 2011 01:07 AM


Google News

ராசிபுரம்: ''தனியார் பஸ்களில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ராசிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரதீபா எச்சரித்துள்ளார்.

மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் உத்தரவின் பேரில், ராசிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரதீபா, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை, ஆயிபாளையம் பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில், வாகன சோதனை மேற்கொண்டார்.

அவ்வழியாக சென்ற தனியார் பஸ்களில், அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த பஸ்களுக்கு, சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும், அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள், வரி ஏய்ப்பு செய்த பிற மாநில வாகனங்கள், மோட்டார் வாகன சட்டப்படி பதிவெண்கள் எழுதாத வாகனங்கள், சரக்கு வாகனங்களில் அபாயகரமாக, அதிகப்படியான நபர்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது, 15 வாகனங்களுக்கு, 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டது.



அப்போது ஆய்வாளர் பிரதீபா கூறியதாவது: ராசிபுரத்தில் இருந்து சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை செல்ல அரசு நிர்ணயித்த கட்டணம், 8.50 ரூபாய். ராசிபுரத்தில் இருந்து சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை டவுன் பஸ்களுக்கு, 6.00 ரூபாய், ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் வரை செல்லும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களுக்கு, 6.00 ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். அதேபோல், ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு வரை, அரசு மப்சல் பஸ் மற்றும் தனியார் பஸ்களில், 10 ரூபாய், ராசிபுரத்தில் இருந்து ஈரோடு வரை, 15.50 ரூபாய், ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் செல்ல, 15.50 ரூபாய் கட்டணமாக வசூல் செய்ய வேண்டும். இக்கட்டணங்களை தவிர, கூடுதல் கட்டணம் வசூலித்தால், அந்த பஸ்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மோட்டார் வாகன சட்டப்படி பதிவு எண்கள் எழுதாத வாகனங்களின் ஆர்.சி., ரத்து செய்யப்படும். இவ்வாறு கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us