/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கைதனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை
ராசிபுரம்: ''தனியார் பஸ்களில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ராசிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரதீபா எச்சரித்துள்ளார்.
அப்போது ஆய்வாளர் பிரதீபா கூறியதாவது: ராசிபுரத்தில் இருந்து சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை செல்ல அரசு நிர்ணயித்த கட்டணம், 8.50 ரூபாய். ராசிபுரத்தில் இருந்து சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை டவுன் பஸ்களுக்கு, 6.00 ரூபாய், ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் வரை செல்லும் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்களுக்கு, 6.00 ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். அதேபோல், ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு வரை, அரசு மப்சல் பஸ் மற்றும் தனியார் பஸ்களில், 10 ரூபாய், ராசிபுரத்தில் இருந்து ஈரோடு வரை, 15.50 ரூபாய், ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் செல்ல, 15.50 ரூபாய் கட்டணமாக வசூல் செய்ய வேண்டும். இக்கட்டணங்களை தவிர, கூடுதல் கட்டணம் வசூலித்தால், அந்த பஸ்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மோட்டார் வாகன சட்டப்படி பதிவு எண்கள் எழுதாத வாகனங்களின் ஆர்.சி., ரத்து செய்யப்படும். இவ்வாறு கூறினார்.


