/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தி.மு.க., சேர்மன் மீண்டும் போட்டியிடுவாரா? சிறையில் இருப்பதால் ஆதரவாளர்கள் குழப்பம்தி.மு.க., சேர்மன் மீண்டும் போட்டியிடுவாரா? சிறையில் இருப்பதால் ஆதரவாளர்கள் குழப்பம்
தி.மு.க., சேர்மன் மீண்டும் போட்டியிடுவாரா? சிறையில் இருப்பதால் ஆதரவாளர்கள் குழப்பம்
தி.மு.க., சேர்மன் மீண்டும் போட்டியிடுவாரா? சிறையில் இருப்பதால் ஆதரவாளர்கள் குழப்பம்
தி.மு.க., சேர்மன் மீண்டும் போட்டியிடுவாரா? சிறையில் இருப்பதால் ஆதரவாளர்கள் குழப்பம்
திருச்செங்கோடு: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி சேர்மன் நடேசன், வரும் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவாரா என, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோடு நகராட்சியை ஒருமுறை கூட அ.தி.மு.க., கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடந்துள்ள ஐந்து உள்ளாட்சி தேர்தலில், முதல் இரண்டு முறை தி.மு.க.,வை சேர்ந்த ஆறுமுகமும், அதைய டுத்து தொடர்ந்து மூன்று முறை தி.மு.க.,வை சேர்ந்த நடேசனும் சேர்மனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்செங்கோடு நகராட்சியை குறிவைத்து, தி.மு.க.,வை சேர்ந்த ஏழு பேர் விருப்பமனு அளித்துள்ளனர். அதில், தற்போதையே சேர்மன் நடேசன் சார்பிலும் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது. அவர், தேர்தலில் போட்டியிடுவாரா, மாட்டாரா என தெரியாத நிலையிலும், விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காரணம், கடந்த 1ம் தேதி, நிலமோசடி வழக்கில், சேர்மன் நடேசனை, நில அபகரிப்பு பிரிவு போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. மேலும், செப்டம்பர் 29ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தேர்தலில் போடியிடுவாரா என, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


