Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நில அபகரிப்பு: கல்விக் குழும தலைவருக்கு முன் ஜாமின்

நில அபகரிப்பு: கல்விக் குழும தலைவருக்கு முன் ஜாமின்

நில அபகரிப்பு: கல்விக் குழும தலைவருக்கு முன் ஜாமின்

நில அபகரிப்பு: கல்விக் குழும தலைவருக்கு முன் ஜாமின்

ADDED : செப் 16, 2011 11:39 PM


Google News
மதுரை: மதுரையில், நில அபகரிப்பு வழக்கில், வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கத்திற்கு, ஐகோர்ட் கிளை நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்தவர் சமையாள்,55. இவருக்கு, 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இருந்தது. அதை, குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டுவதாக, முத்துராமலிங்கம் மற்றும் கல்விக் குழும ஊழியர் மீது, சமையாள் புகார் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன், நிலத்திற்குச் சென்ற தன்னை மிரட்டியதாக, அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து முத்துராமலிங்கம், ஊழியர் திருப்பதி வெங்கடேசன், கட்டட ஒப்பந்தக்காரர் விஜய்ஆனந்த் மீது, வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில், முன் ஜாமின் கோரிய முத்துராமலிங்கம் மனு, நேற்று நீதிபதி ஆர்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கதிர்வேலு ஆஜரானார். முன் ஜாமின் வழங்க, அரசு வழக்கறிஞர் ராமர் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும், நிபந்தனை முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us