/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்புஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
ADDED : செப் 16, 2011 11:33 PM
திருப்பூர் : உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்த, திருப்பூர் மாநகராட்சிக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன் டவுன்ஹால் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தலில் நகரப்பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்துக்கு 2,062 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மாநகராட்சியில் உள்ள 425 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த 1,020 இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு ஓட்டுச்சாவடிக்கு தலா இரண்டு இயந்திரங்கள் என 850 இயந்திரங்கள், செயல்பாடு விளக்கம் மற்றும் 'ரிசர்வ்' பயன்பாட்டுக்கு என மொத்தம் 1,020 இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த இயந்திரங்களில், முதல்கட்டமாக 440 இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, டவுன்ஹால் அரங்கில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. முன்பக்கம் மற்றும் தெற்குப்பகுதியில் உள்ள கதவுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் தலா ஐந்து போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை இவர்கள் பணியாற்றுகின்றனர். மீதமுள்ள இயந்திரங்கள், இரண்டொரு நாளில் கொண்டு வரப்பட உள்ளன.