Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீரகோபால் கோர்ட்டில் திடீர் சரண்

வீரகோபால் கோர்ட்டில் திடீர் சரண்

வீரகோபால் கோர்ட்டில் திடீர் சரண்

வீரகோபால் கோர்ட்டில் திடீர் சரண்

ADDED : செப் 16, 2011 11:26 PM


Google News

கோவை : நேற்று முன்தினம் ஜாமினில் வெளிவந்த தி.மு.க.,மாநகர செயலாளர் வீரகோபால்,நேற்று திடீரென கோவை கோர்ட்டில் சரணடைந்தார்.

தொண்டாமுத்தூர் ரோடு, வடவள்ளியைச் சேர்ந்தவர் ரத்தினம். விளாங்குறிச்சியில் இவருக்கு சொந்தமான 2.6 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க.,செயலாளர் வீரகோபால் உள்ளிட்ட மூவர் அபகரித்துக் கொண்டதாக புகார் எழுந்தது. இவ்வழக்கில் வீரகோபாலுக்கு மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நேற்று முன்தினம் மாலை சிறையில் இருந்து வெளியேறினார். இதற்கிடையே, கணபதி ராகவி கார்டனைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகாரில், நேற்று ஜே.எம்.எண்:1 கோர்ட்டில் வீரகோபால் சரணடைந்தார். ஏற்கனவே, இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் இவருக்கு முன் ஜாமின் வழங்கி இருந்தது. சரணடைந்த அவர் @நற்று இரு நபர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us